Ad Widget

அராலியிலும் இரண்டு வீடுகளில் எரிவாயு அடுப்புகள் வெடித்து சிதறின!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி கிழக்கு ஜே/163 கிராம சேவகர் பிரிவிலுள்ள இரண்டு வீடுகளில் அண்மையில் எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கடந்த 28ஆம் திகதி ஒரு வீட்டிலும், 29ஆம் திகதி மற்றைய வீட்டிலும் வெடித்துச் சிதறியுள்ளன.

இது தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒரு வீட்டினரால் நேற்று (புதன்கிழமை) முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸாரின் இரண்டு குழுக்கள் குறித்த வீட்டிற்கு சென்று அடுப்பினை பார்வையிட்டு சென்றுள்ளனர்.

சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோதே எரிவாயு அடுப்பு இவ்வாறு வெடித்துச் சிதறியதாகவும், எனினும் எவருக்கும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும் சம்பவம் நிகழ்ந்த வீட்டு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை அண்மையில் சுன்னாகத்திலும் வட்டுக்கோட்டையிலும் இவ்வாறு எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறிய சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts