அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்வரும் 28 ஆம் திகதி ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரத் துறைக்கும், அரச சேவைத் துறைக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ள இழப்புக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடு முழுவதிலுமுள்ள சகல அரச வைத்தியசாலைகளினதும் முன்னாள் இந்த ஆர்ப்பாட்டம் அன்றைய தினம் இடம்பெறும் என இச்சங்கத்தின் உதவிச் செயலாளர் டாக்டர் ஹரித அலுத்கே கூறியுள்ளார்.