Ad Widget

அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு வார இறுதியில் தடுப்பூசி வழங்கப்படும்

அரச மற்றும் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்களுக்கு அஸ்ட்ரா செனகா கொவிஷீல்ட் தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் வார இறுதி நாட்களில் ஆரம்பிக்கப்படவிருப்பதாக பதில் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அதன்படி 30 வயதிற்கும் 60 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவு செய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு தற்சமயம் தடுப்பூசி ஏற்றப்படுகின்றது என்றும் அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் கொலன்னாவ, கொத்தட்டுவ, மொரட்டுவ, எகொடஉயன, ஹங்வெல்ல ஆகிய இடங்களில் தடுப்பூசி வழங்கப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில், கம்பஹா, அத்தனகல்ல, நீர்கொழும்பு, சீதுவ, மஹர, பியகம, வத்தளை, மீரிகம, ராகம, மினுவாங்கொட, ஜாஎல, களனி, கட்டான, திவுலபிட்டிய, தொம்பே ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளிலும் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

களுத்துறை மாவட்டத்தின் அகலவத்த, பண்டாரகம, பாணந்துறை, ஹொரண, மத்துகம ஆகிய பகுதிகளில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts