Ad Widget

அரச மருந்தகங்கள் ஊடாக இலவசமாக மருந்து விநியோகம்!

அரச வைத்தியசாலைகளினால் விநியோகிக்கப்படும் மருந்துசீட்டுகளுக்கு அரச மருந்தகங்கள் (ஒசுசல) ஊடாக இலவசமாக மருந்துகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துச் சுகாதார ஊழியர்கள் இன்று(வெள்ளிக்கிழமை) ஐந்தாவது நாளாகவும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்காரணமாக அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதற்கு வருபவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இதேவேளை, சுகாதார ஊழியர்களின் போராட்டத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Related Posts