Ad Widget

அரச பஸ் சேவைகள் வடக்கில் ஸ்தம்பிதம்!! யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் குழப்பநிலை!!!

அரச பேருந்து சேவைகள் அனைத்தும் வடக்கு மாகாணத்தில் இன்று காலை தொடக்கம் ஸதம்பிதம் அடைந்துள்ளன. இதனால் பொதுமக்கள், மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை இன்று காலை ஆரம்பித்தனர்.

வடபிராந்திய பிரதான முகாமையாளர் உபாலி கிரிவத்துடுவ மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரை வடக்கிலிருந்து உடன் இடமாற்றவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் எதுவும் இல்லை. அங்கு அசம்பாவதங்கள் ஏற்படாதிருக்க பொலிஸார் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இருப்பினும் வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் தொழிற்சங்க நடவடிக்கையை மீறி பருத்தித்துறை சாலை பேருந்து சேவையில் ஈடுபட்டதால் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

ஊழியர்கள் இடமாற்றக்கோரும் வடபிராந்திய பிரதான முகாமையாளருக்கும் பருத்தித்துறை சாலை முகாமையாளருக்கும் இடையே உள்ள நெருக்கமே இதற்குக் காரணம் எனக் குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்தநிலையில் தற்போது சிறப்பு அதிரடிப் படைப் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

Related Posts