Ad Widget

அரசுக்கு பொதுபல சேனா எச்சரிக்கை!

இலங்கையில் பௌத்தம் எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தலை முடிவுக்குக்கொண்டுவருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் அதனை மாற்றவும் தயங்கமாட்டோம் என பொதுபல சேனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

Kirama Wimalajothi -pothupala -sena

அதன் மாநாட்டில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார் பொதுபலசேனாவின் தலைவர் கிரம விமலஜோதி.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

இலங்கை ஒரு பல்லின நாடால்ல. அது ஒரு பௌத்த நாடு. பௌத்த நாட்டில் அது இஸ்லாமிய தீவிரவாதிகள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது.

பௌத்தர்களின் கரிசனைகள் குறித்த ஆவணமொன்றை அரசாங்கத்திடம் கையளிக்கவுள்ளோம். அரசாங்கம் அதற்குத் தீர்வை காணவிட்டால் மாற்றத்தை ஏற்படுத்துவோம் – என்றார்.

Related Posts