Ad Widget

அரசியல் கைதிகள் விடுதலை!! இந்த வாரம் இறுதி முடிவு! ஜனாதிபதி, பிரதமருடன் பேச்சு – மாவை

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் இந்த வாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்தவுள்ளது. இந்தப் பேச்சின்போது கைதிகள் விவகாரம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

‘நாடாளுமன்றம் இந்த வாரம் கூடும் வேளை பல சட்டங்கள் கொண்டு வரப்படும். இத்தகைய சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இறுதி முடிவை எடுக்க வலியுறுத்தும். இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோருடன் முக்கிய கலந்துரையாடல்கள் நடத்தப்படும்.

குறிப்பாக ஜனாதிபதியுடனான முதல் சந்திப்பு தொடர்பாக எம்மால் முயற்சி மேற்கொள்ளப்பட்டபோதும் அவர் தாய்லாந்து சென்றதால் அச்சந்திப்பு தவிர்க்கப்பட்டது.

எனினும், இந்த வாரத்தில் அச்சந்திப்பு நடைபெறும். இதன்போது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணிகள் விடுவிப்பு மற்றும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பை வழங்குதல்தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளோம்” – என்றார்.

Related Posts