Ad Widget

அர­சியல் கைதி­களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு! :சுவாமிநாதன்

தமிழ் அர­சியல் கைதி­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு விரைவில் தீர்­வி­னைப்­பெற்­றுக்­கொ­டுக்கும் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக் ­கப்­பட்­டு­ வ­ரு­வ­தாக இந்­து­ க­லா­சாரதிணைக்­களம், சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு, புனர்­வாழ்­வ­ளிப்பு, மீள்­கு­டி­யேற்ற மற்றும் இந்து மத அலு­வல்கள் அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் தெரிவித்தார்.

மட்­டக்­க­ளப்­புக்கு வரு­கை­ தந்த அமைச்­ச­ரிடம் அனு­ரா­த­பு­ரத்தில் தமிழ் அர­சியல் கைதி­களின் உண்­ணா­வி­ரத போரா ட்ட விவ­காரம் தொடர்பில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் கேட்­ட­போதே அவர் இதனை தெரிவித்தார்.

73 தமிழ் அர­சியல் கைதி­களின் வழக்­குகள் மேல் நீதி­மன்றில் உள்­ளன. அவர்­க­ளுக்­கான சோத­னைப்­பத்­திரம் வழங்­கப்­பட்­டுள்­ளது. சட்­டமா அதிபர் குறித்த தமிழ் அர­சியல் கைதி­களின் வழக்­கு­களை விரை­வு­ப­டுத்­து­வ­தாக தெரிவித்­துள்ளார்.

விரை­வான வகையில் தமிழ் அர­சியல் கைதிகள் தொடர்­பான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­து­ வ­ரு­கின்றேன். என்னால் முடிந்­த­ வ­ரையில் அதற்­கான முயற்­சி­களை மேற்­கொண்­டு­ வ­ரு­கின்றேன். சட்­டத்­தினை நாங்கள் மீறி நடக்­க­ மு­டி­யாது. ஆனால் அவற்­றினை சுல­ப­மாக விரை­வாக முடிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்ளேன் என்றார்.

Related Posts