தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வினைப்பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக் கப்பட்டு வருவதாக இந்து கலாசாரதிணைக்களம், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
மட்டக்களப்புக்கு வருகை தந்த அமைச்சரிடம் அனுராதபுரத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போரா ட்ட விவகாரம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேட்டபோதே அவர் இதனை தெரிவித்தார்.
73 தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் மேல் நீதிமன்றில் உள்ளன. அவர்களுக்கான சோதனைப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் குறித்த தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளை விரைவுபடுத்துவதாக தெரிவித்துள்ளார்.
விரைவான வகையில் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றேன். என்னால் முடிந்த வரையில் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன். சட்டத்தினை நாங்கள் மீறி நடக்க முடியாது. ஆனால் அவற்றினை சுலபமாக விரைவாக முடிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளேன் என்றார்.