Ad Widget

அமைச்சர் டெனிஸ்வரன் மீது நடவடிக்கை : முதல்வர் விக்கி

வட­மா­காண போக்­கு­வ­ரத்து மீன்­பிடி அமைச்சர் பா.டெனிஸ்­வரன் தொடர்பில் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டு­மென வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஷ்­வரன் அறி­வித்­துள்ளார்.

வட­மா­காண அமைச்சர் பா.டெனிஸ்­வரன் தொடர்­பாக அவர் பிர­தி­நி­தித்­துவம் தமி­ழீழ விடு­தலை இயக்­கத்தின் செய­லாளர் ந.ஸ்ரீகாந்­தா­வினால் அனுப்பி வைக்­க­கப்­பட்ட கடி­தத்­திற்கு பதி­ல­ளிக்கும் வகையில் முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வ­ரனால் அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்ள கடி­தத்­தி­லேயே மேற்­கண்­ட­வாறு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் அனுப்­பிய பதில் கடி­தத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

உங்கள் கடிதம் கிடைத்­தது. அதன் உள்­ள­டக்­கங்கள் கவ­னத்தில் எடுக்­கப்­பட்­டன. ஏற்­க­னவே அமைச்சர் பா.டெனிஸ்­வரன் எமது விசா­ர­ணைக்­குழு முன் தான் ஆஜ­ரா­க­மாட்டார் என்று பகி­ரங்­க­மாகக் கூறி­யதை முன்­வைத்தும் வேறு கார­ணங்­க­ளுக்­கா­கவும் அவர் மீது நட­வ­டிக்கை எடுக்கத் தீர்­மா­னித்­தி­ருந்தேன். எனவே, உங்கள் பரிந்­து­ரை­களும் கவ­னத்தில் எடுக்­கப்­பட்டு உரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும் என்­பதைத் தங்­க­ளுக்குத் தெரி­யப்­ப­டுத்­து­கின்றேன் என்­றுள்­ளது.

முன்­ன­தாக வவு­னி­யாவில் நடை­பெற்ற தமி­மீழ விடு­தலைக் கழ­கத்தின் தலை­மைக்­குழுக் கூட்­டத்தில் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்­திற்கு அமை­வாக கடந்த 13ஆம் திகதி அவ்­வி­யக்­கத்தின் செய­லாளர் ந.சிறீக்­காந்தா, எமது கட்­சியைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி வடக்கு மாகாண சபையில் தங்கள் தலை­மையில் அமைந்­துள்ள அமைச்­ச­ர­வையில் தொடர்ந்து அங்கம் வகிப்­ப­தற்­கான சகல தகு­தி­க­ளையும் பா.டெனீஸ்­வரன் இழந்து விட்­டி­ருப்­ப­தாக எமது கட்சி தீர்­மா­னித்­துள்­ளது.

பா.டெனீஸ்­வ­ரனை அமைச்­ச­ர­வையில் இருந்து நீக்க உரிய நட­வ­டிக்கை எடுக்­கு­மாறும் அவ­ருக்குப் பதி­லாக எமது கட்­சி­யினால் பரிந்­து­ரைக்­கப்­படும் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னரை அமைச்­ச­ராக நிய­மிக்­கு­மாறு தங்­களைக் கோரு­வ­தற்கு கட்சி மேலும் தீர்­மா­னித்­துள்­ளது. டெனீஸ்­வ­ரனை அமைச்­ச­ர­வையில் இருந்து நீக்கும் நட­வ­டிக்­கையை முன்­னெ­டுக்­கு­மாறு வேண்டிக் கொள்­கின்றேன். தங்கள் அமைச்­ச­ர­வைக்­கான எமது கட்­சியின் பிர­தி­நி­தியின் பெயரை உரிய நேரத்தில் அறி­யத்­த­ருவோம் எனக் குறிப்­பிட்டு கடி­த­மொன்றை அனுப்­பி­யி­ருந்­தார் இந்த விடயம் குறித்து இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சோனாதிராஜா, எதிர்க்கட்சித்தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் ஆகியோருக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts