Ad Widget

அனைத்து அரச ஊழியர்களையும் சேவைக்கு அழைப்பதற்கு தீர்மானம்!

எதிர்வரும் 3ஆம் திகதி முதல் அனைத்து அரச ஊழியர்களையும் சேவைக்கு அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான சுற்றறிக்கை இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாகவே எதிர்வரும் 3ஆம் திகதி முதல் அரச சேவைகள் முழுமையாக முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts