Ad Widget

அனுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள அரசியல் கைதிகளை சந்தித்தார் சுமந்திரன்

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சாணக்கியன் உட்பட்ட குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

இன்று (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு சிறைச்சாலைக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கைதிகளின் நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டதுடன், அவர்கள் தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சனைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டனர்.

இதன்போது முன்னாள் வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சயந்தன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts