Ad Widget

அந்தோனியாருக்கு பகிடியும் தெரியாது வெற்றியும் தெரியது – டக்ளஸ்

அந்தோனியாருக்கு பகிடியும் தெரியாது வெற்றியும் தெரியது என்பது போல் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அகிம்சைப் போராட்டத்தினை முன்னெடுக்கப் போவதாக கூறி, வார்த்தையை விட்டு விட்டார் என அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

c

நேற்று ஞாயிற்றுக்கிழமை (28), யாழ். பழைய பூங்கா வளாகத்தில் வலைப்பந்து மற்றும் கூடைப்பந்தாட்ட மைதானத்திற்கான சிரமதான பணியில் ஈடுபட்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்பார்க்கும் சூழல் மாறாவிட்டால் அகிம்சைப் போர் வெடிக்குமென மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இன்றுடன் 94 நாட்கள் இருக்கின்றன மாவை அகிம்சைப் போராட்டத்தினை முன்னெடுப்பதற்கு, அத்துடன், மாவை சேனாதிராஜாவின் தலைமையிலான இலங்கை தமிழரசு கட்சி 2015 ஆம் ஆண்டுக்குள் தீர்வினை காண வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் மேற்கொண்ட அரசியல் போன்று, சூடு கண்ட பூனை அடுப்பங்கரையை நாடாது இனியும் மக்கள் தமிழ் தேசியகூட்டமைப்பின் வார்த்தையினை நம்பி மக்கள் ஏமாந்து போக மாட்டார்கள் என நம்புகின்றேன் என்றார்.

அதேவேளை, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றுள்ளதுடன், பதவியும் பறிபோயுள்ளது. இதனால், இலங்கை தமிழ் மக்களுக்கு பாதிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது இது குறித்து உங்களின் கருத்து என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அவர் அதற்கு பதலிளிக்கையில், தமிழகத் தமிழர்களுக்கு அது பாதிப்பாக இருக்கலாமே தவிர இலங்கைத் தமிழர்களுக்கு விடிவைக் கொடுக்கும் ஒரு சந்தர்ப்பமாக இருக்கும் என கூறினார்.

தொடர்புடைய செய்தி

ஜெயலலிதாவின் கைதினையடுத்து எல்லைதாண்டிய இந்திய மீனவர்களது வருகை குறைவடைந்துள்ளது – அமைச்சர் டக்ளஸ்

உயிரைப் பணயம் வைத்து சாத்வீக போராட்டத்தில் குதிப்போம்: மாவை

Related Posts