Ad Widget

அதிபரின் அலுவலகம் மற்றும் வீட்டின் மீது கல்வீச்சுத்தாக்குதல்

attack-attackயாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் பணிபுரியும் அதிபரின் அலுவலகம் மற்றும் பாடசாலை வளாகத்திலுள்ள அவரது வீட்டின் மீது இனம்தெரியாத நபர்களால் இன்று அதிகாலை கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

இப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் இருவர் ஒழுக்கமின்மை காரணமாக கடந்த வாரம் இடைநிறுத்தப்பட்டனர். இம் மாணவர்களுடன் தொடர்புடையவர்களே இவ்வாறான தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக பாதிக்கப்பட்ட அதிபர் தனது முறைப்பாட்டில் தெரிவித்ததாக பொலிஸார் கூறினர்.

இக் கல்வீச்சுத் தாக்குதலில் அலுவலகத்தின் 6 ஜன்னல் கண்ணாடிகளும் வீட்டின் 5 ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளாகவும் இச்சம்பவம தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related Posts