Ad Widget

அதிக வெப்பத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுரை

நாட்டின் தற்போது நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலையிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள மக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் என்று சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

அதிக வெப்பம் காரணமாக சரும நோய்கள் உள்பட உடல் வறட்சி போன்ற நிலமைகளுக்கு மக்கள் முகங்கொடுக்க நேரிடும் என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதான தாதி புஸ்பா ரம்யானி டி சில்வா தெரிவித்துள்ளார்.

முற்பகல் 10 மணிமுதல், பிற்பகல் 2 மணிவரையான காலப்பகுதியில் வெளியில் செல்வதை மக்கள் தவிர்ப்பது சிறந்தது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சரும அலட்சி, உடல் வறட்சி, தலைவலி, உடல் எரிச்சல் போன்ற நோய் அறிகுறிகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது.

இதனால் வெளியில் செல்லும்போது வெப்பத்திலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்வதற்கான வழிமுறைகளை மக்கள் கட்டாயம் பின்பற்றவேண்டும் என்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதான தாதி புஸ்பா ரம்யானி டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 7ஆம் திகதி வரை நாட்டின் சில பகுதிகளுக்கு சூரியன் உச்சம் கொடுக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் பகல் பொழுதில் அதிக வெப்பத்துடன் கூடிய வானிலை நிலவும். நாட்டின் கிழக்கு மாகாணத்திற்கு இதனால் அதிக பாதிப்புக்கள் இருப்பதாக வானிலை அதிகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்தார்.

Related Posts