Ad Widget

அடித்து துன்புறுத்தி நகைகள் கொள்ளை

உடுவில் டச்சுறோட் பகுதியில் உள்ள வீட்டுக்குள் முகமூடி அணிந்து நுழைந்த கொள்ளையர்கள், வீட்டில் இருந்தவர்களை அடித்து, துன்புறுத்தி நகைகளை நேற்று கொள்ளையடித்து சென்றுள்ளனர். இச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (13) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

அதிகாலை வீட்டு முன்கதவினை உடைத்து உள் நுழைந்த கொள்ளையர்கள் படுத்திருந்த பெண் மீது முகத்தில் சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் தலையணையால் முகத்தினை அழுத்தி கொலை செய்வதற்கு முயன்றுள்ளனர்.

எனவே, தன்னை காப்பாற்றி கொள்வதற்காக அவர் எதுவித சத்தமும் இன்றி அமைதியாக இருந்துள்ளார். இதன் போது அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கசங்கிலி, உட்பட 2 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். சம்பவம் தொடர்பில் தடஅறிவியல் பொலிஸாரின் உதவியுடன் குற்றத்தடுப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts