Ad Widget

அச்சுவேலி தொலைத்தொடர்பு நிலையத்தில் தீ

அச்சுவேலி நகரப்பகுதியில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் நகரப்பகுதியில் அமைந்துள்ள மூன்று கடைதொகுதியின் கட்டிடங்கள் முற்றாக சேதமடைந்துள்ளன.

fire-comunication

சுமார் இருபது இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களும் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு நிலையம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன் மேலும் இரு கடைகள் பகுதியளவில் எரிந்துள்ளன.

இந்த சம்பவம் இன்று அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அச்சுவேலி பொலிஸார் மற்றும் யாழ் மாநகரசபையின் தீயணைப்பு வீரர்கள் தீ பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதனால் தொலைத்தொடர்பு நிலையத்தில் விற்பணைக்கு வைக்கப்பட்டிருந்த பெறுமதியான கைபேசிகள், மடிக்கணணிகள் உட்பட 25 இலட்சம் ரூபா பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்கள் என்பன முற்றாக தீயில் எரிந்துள்ளன.

இந்தசம்பவம் தொடர்பில் தடயவியல் ஆய்வாளர்கள் மற்றும் பொலிஸார் மூலம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts