கரையொதுங்கிய மீனவர்களுக்கு விளக்கமறியல்

அச்சுவேலி தொண்டமானாறு கடற்பரப்பில் கரையொதுங்கிய இந்திய மீனவர்கள் ஐவரையும் எதிர்வரும் ஜூலை மாதம் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை மாவட்ட நீதவான் பெருமாள் சிவகுமார், வியாழக்கிழமை (23) உத்தரவிட்டார்.

தழிழ்நாடு மாநிலம் நாகப்பட்டிணம் பகுதியில் இருந்து ஒரு படகுடன் சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த குறித்த மீனவர்களின் படகு எரிபொருள் தீர்ந்துள்ளது. இதனால் வழிதவறிய குறித்த படகு, வியாழக்கிழமை (23) மாலை தொண்டமனாறு கடற்பரப்பில் கரையொதுங்கியது.

கடலில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினரை குறித்த மீனவர்களை காப்பாற்றியிருந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் கடற்றொழில் நீரியல்வளதுறை மாவட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களை பருத்தித்துறை மாவட்ட நீதவான் அவர்களின் வாசஸ்தலத்தில் ஆஜர் செய்தபோது நீதவான் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Related Posts