Ad Widget

வடக்கு ஆளுனருடன் சமந்தா சந்திப்பு

ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளார்.

மேலும் இவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவுக்கான விஜயத்தை நிறைவு செய்தபின் நேற்று மாலை சமந்தா பவர் உள்ளிட்ட குழுவினர் இலங்கையை வந்தடைந்தார்.

இதேவேளை இவர்கள் யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றையும் மேற்கொண்டு வடமாகாண ஆளுநர் எச்.எம்.பள்ளியக்காரவை ஆளுநர் அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்து கலந்துரையாடினர்.

சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக நடைபெற்ற சந்திப்பில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் வடமாகாண ஆளுநர் செயலாளர் இ.இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உள்ளிடோரையும் சமந்தா பவர் சந்தித்து கலந்துரையாடுவார் எனத் தெரிகிறது.

Related Posts