Ad Widget

ரொரன்டோ முருகனும் விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக குற்றச்சாட்டு!!

கனடாவின் ரொரன்டோவிலுள்ள முக்கிய இந்து ஆலயங்களில் ஒன்றான கந்தசாமி ஆலயம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த ஆலயம் இவ்வாறு பணம் வழங்கியமை தொடர்பில் கனேடிய எல்லைப் பாதுகாப்பு முகவர் நிறுவனம் அந்நாட்டு மத்திய நீதிமன்றிற்கு இது குறித்து அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளதாகவும், இந்த ஆலயத்தினை உலகத் தமிழர் இயக்கம் நடத்திய வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

உலகத் தமிழர் இயக்கம் கனடாவின் பயங்கரவாத இயக்கப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆயலத்தின் பூசகர் ஒருவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் கனேடிய ஊடகச் செய்தி ஒன்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் கந்தசாமி ஆலயத்தினை பலவந்தமான அடிப்படையில் உலகத் தமிழர் இயக்கம் கட்டுப்படுத்தி வந்ததாக கனேடிய அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

ஆலயத்தினை பயன்படுத்தி புலிகளுக்கு சார்பான பிரச்சாரங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டு பிழையானது என ஆலயத்தின் நீண்ட கால தன்னார்வ தொண்டர்களில் ஒருவரான தனபாலசிங்கம் கனகசபாபதி தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஆலயம் தொடர்புபடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆலயம் அனைவருக்கும் பொதுவானது எனவும் சிலவேளைகளில் உலகத் தமிழர் இயக்க உறுப்பினர்கள் அங்கு வந்திருக்கலாம் எனவும் எந்தவொரு தரப்பினரையும் வழிபாடுகளில் ஈடுபடக்கூடாது என தடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts