Ad Widget

யுவதியைக் காணவில்லை என முறைப்பாடு

மல்லாகம் பகுதியினை சேர்ந்த 21 வயதுடைய யுவதியை வியாழக்கிழமை மாலையில் இருந்து காணவில்லை என அவரது தந்தையால் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்து தனது வேலைகளை கவனித்துக்கொண்டிருந்தவர் வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் காணாமல் போயுள்ளார். உறவினர்கள் எங்கும் தேடி யுவதியை காணாத நிலையில் அன்றைய தினம் இரவு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts