Ad Widget

யாழ். சிறைக்கைதிகள் தப்பியோட்டம்?

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட இரண்டு கைதிகள், புதன்கிழமை (11) இரவு தப்பி ஓடியுள்ளனர்.

தப்பி ஓடிய கைதிகளை நாவற்குழிப் பகுதியில் வைத்து சாவகச்சேரி பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக இன்று வியாழக்கிழமை (12) அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்தும் அவர்கள் தப்பித்து ஓடியுள்ளனர்.

இந்தக் தகவலை சாவகச்சேரி வைத்தியசாலை தகவல்கள் உறுதிப்படுத்திய போதும், சிறைச்சாலை அதிகாரிகள் ஊடாக உறுதிப்படுத்த முடியவில்லை.

Related Posts