யாழ்ப்பாணத்தின் மூன்று பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த 80 பொலிஸார் தென் பகுதிகளிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் பெற்றுள்ளனர்.
பொலிஸ் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படும் இடமாற்றத்தின் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை (10) அமுலுக்கு வரும் வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த 34பேரும், நெல்லியடி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 27பேரும், வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 19பேரும் இவ்வாறு இடமாற்றம் பெற்றுள்ளனர்.
இவர்களுக்கான பதில் கடமையாற்றுபவர்கள் இன்னமும் அந்தந்த பொலிஸ் நிலையங்களில் நியமிக்கப்படவில்லை என அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.