யாழில் வெடிபொருள் வெடித்ததில் இருவர் படுகாயம்!

யாழ்.ஓட்டுமடம் பகுதியில் பழைய இரும்பு விற்பனை செய்யும் இடத்தில் வெடிபொருள் ஒன்று வெடித்ததில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை (07.9.2015) முற்பகல் குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதி கிராம சேவகர் பிரிவு ஜே-88 பிரிவில் உள்ளடங்கும் ஓட்டுமடம் ஆலடி பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்துச் சம்பவத்தில் ஜெ.பத்மஜெகன் (வயது-28), எஸ்.சுரேஷ் (வயது-26) ஆகிய இரு குடும்பஸ்தர்கள் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவமானது இரும்பிற்காக இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட வெடிபொருளான ஆர்.பி.ஜி வர்க்கத்தை
சேர்ந்த கழிவு இரும்பினை சுத்தியலால் உடைக்கின்ற போதே குறித்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தினால் ஒருவரது இடது கையில் 3 விரல்கள் துண்டிக்கப்பட்டதுடன், உடம்பிலும் சிதறல் காயங்கள் ஏற்பட்டன.

Related Posts