மீண்டும் டெங்கு அபாயம் நேற்று மட்டும் ஆறு பேர் சிகிச்சை

maleriya-mosquto-denkuயாழ். போதனாவைத்தியசாலையில் நேற்று மட்டும் ஆறு பேர் டெங்கு நோய்த்தாக்கத்திற்குள்ளாகிய நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருந்து இருவரும், யாழ். சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருந்து ஒருவரும் மற்றும் கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில இருந்தும் ஒருவரும், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருந்து இருவருமாகவே இந்த அறுவரும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்சமயம் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts