Ad Widget

மாதுலுவாவே சோபித்த தேரர் காலமானார் : வியாழன்று தேசிய துக்கதினம்

மறைந்த சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரரின் இறுதி கிரியை நடைபெறும் எதிர்வரும் 12ஆம் திகதி வியாழக்கிழமை தேசிய துக்க தினமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.

maluvoo-pikku-therar

அன்னாரது இறுதி கிரியை பூரண அரச மரியாதையுடன் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மைதானத்தில் எதிர்வரும் 12 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு இடம் பெறும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

சிங்கபூரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரர், இன்றுக் காலை காலமானார்.

அன்னாரின் பூதவுடல் அங்கிருந்து இன்றிரவு நாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

Related Posts