Ad Widget

மண்டைதீவு படுகொலை நினைவேந்தல்!

மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களின் 38ஆவது ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் (10-06-2024) அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட 31 பேரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் இன்றுகாலை அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களின் உறவினர்கள், கிறிஸ்தவ மதகுருமார்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

1986ஆம் ஆண்டு ஜுன் மாதம் 10ஆம் திகதி குருநகர், இறங்குதுறையில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற மீனவர்கள் 31 பேர் மண்டைதீவு கடலில் வைத்து கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related

Related Posts