நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை நடைமுறைக்கு வரும் வகையில் புதிய இராணுவத் தளபதியாக கிரிசாந்த டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நியமனத்தை வழங்கியுள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
இராணுவத்தின் 21ஆவது தளபதியாக இவர் நியமனம் பெறுகிறார்.
இதுவரை இராணுவத் தளபதியாக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்கவுக்கு பதிலாக இவர் நியமனம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.