Ad Widget

பிஸ்கட் புரையேறி குழந்தை சாவு

பிஸ்கட் புரையேறியதால் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு யாழ்ப்பாணம் ,3ஆம் குறுக்குத் தெருப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் ஐந்து மாதங்களேயான உதயபாலன் காசினி என்ற பெண் குழந்தையே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

வழமைபோல் தாய் குழந்தைகளுக்கு வழங்கும் சத்து நிறைந்த பிஸ்கட் கொடுத்துவிட்டுத் தூங்க வைத்துள்ளார். காலை எழுந்து பால் கொடுப்பதற்குக் குழந்தையைத் தூக்கியபோது அது அசைவற்ற நிலையில் காணப்பட்டுள்ளது. உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துசென்றபோது ஏற்கனவே குழந்தை உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர். இறப்பு விசாரணைகளைப் போதனா வைத்தியசாலையின் திடிர் இறப்பு விசாரணைஅதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சாப்பிட்ட பிஸ்கட் தொண்டையில் சிக்கிப் புரையேறியதால் இறப்பு சம்பவித்துள்ளதாகப் பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Posts