Ad Widget

பிரபாகரன் ஒருவரே தேசியத் தலைவர்! இனியொருவர் உருவாகப் போவதில்லை!!

தேசியத் தலைவர் ஒருவரே, அவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே. இவருக்கு முன்பும் ஒரு தேசிய தலைவர் இருந்ததில்லை. இவருக்குப் பின்னர் இனியொரு தேசிய தலைவர் உருவாகப் போவதில்லை.இவ்வாறு வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – மார்ட்டின் வீதியில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நேற்றுப் புதன்கிழமை மாலை நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

தமிழ்த் தேசிய இனத்தைப் பொறுத்தவரையில் தலைவராக ஆரம்பத்தில் தந்தை செல்வா இருந்தார். அவருக்குப் பின்னால் இப்பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உயர் தலைவராகவும் இருக்கின்ற சம்பந்தனே தமிழ்த் தேசிய இனத்தின் தலைவராக இருக்கிறார்.

தமிழ் தேசியம் என்று பேசுகின்ற நாங்கள் எல்லோரும் ‘தேசியத் தலைவர்’ என்று கூறுவது ஒரே ஒருவரைத்தான். அவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே. அவருக்கு முன்பும் அப்படி ஒரு தேசிய தலைவர் இருந்ததில்லை. அவருக்குப் பின்பும் இப்படி ஒரு தேசியத் தலைவர் உருவாகப் போவதில்லை என்பது எங்களுடைய தெளிவான நிலைப்பாடு.

‘பிராந்தியங்களின் ஒன்றியம்’ என்பது சந்திரிகாவின் அரசியல் தீர்வு முன்மொழிவுகளில் உள்ளடக்கப்பட்ட விடயம். இது ஆங்கிலத்தில் Union of Regions என்று சொல்லப்படுகிறது. Unitary State என்று சொல்கின்ற ஒற்றையாட்சி முறையிலிருந்து மாறுபட்டது.

இதை ஏற்றுகொள்ளாத முறைமையை கொண்டு வருவதற்காகதான் Union of Regions என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறது. Regions என்பது எங்களை பொறுத்த வரையில் வடக்கு, கிழக்கு இணைந்த தாயகம்தான். அது பிழையான விடயம் அல்ல. இதுவும் ஒரு விதமான சமஷ்டி அமைப்புத்தான். அது தான் எங்களுடைய முடிவான முடிவாக நாங்கள் கருதவில்லை.

Related Posts