பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் எதிர்க்கட்சி கையளித்துள்ளது.
இந்த நம்பிக்கையில்லா பிரேரணையின் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 112 பேர் கைச்சாத்திட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்தே நேற்றிரவு அவரிடம் கையளித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.