Ad Widget

பருத்தித்துறை கடற்பரப்பில் படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் உயிரிழப்பு! மற்றொருவரைக் காணோம்!!

பருத்தித்துறைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்காகச் சென்ற போது படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொரு மீனவர் காணாமற்போயுள்ளார். இச்சம்பவம் நேற்றய தினம் இடம்பெற்றுள்ளது.

பருத்தித்துறைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்காக படகு ஒன்றில் மூன்று மீனவர்கள் புறப்பட்டுச் சென்றுள்ளனர். கடும்காற்றுடன் கூடிய மழை கடற்கொந்தளிப்புக் காரணமாக இவர்களின் படகு கவிழ்ந்துள்ளது.

இதில் ஒருவர் கடல் அலையில் அடித்துச்செல்லப்பட்டார். ஒருவர் கடல் அலையில் அடித்துச் செல்லும்போது சக மீனவர்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

ஒருவர் நீந்திக் கரைசேர்ந்தார். கடல் அலையால் அடித்துச் செல்லப்பட்டவரின் சடலத்தை தேடும் பணி தொடர்கிறது.

எஸ்.ஜோர்ஜ் (வயது 45) என்ற மீனவரே உயிரிழந்தவராவார். மரண விசாரணையை பருத்தித்துறை பதில் நீதிவான் பா.சுப்பிரமணியம் மேற்கொண்டார்.

Related Posts