Ad Widget

நோர்வே தூதுவர் வடக்கு விவசாய அமைச்சருடன் சந்திப்பு

இலங்கைக்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நோர்வேக்கான தூதுவர் தோர்ப்ஜோர்ன் கோஸ்ரட்சீதர் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனை அவரது அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு நேற்று வியாழக்கிழமை (26.11.2015) இடம்பெற்றுள்ளது.

03

கடந்த செப்ரெம்பர் மாதம் இலங்கைக்கான தூதுவராகப் பதவியேற்றுக்கொண்ட தோர்ப்ஜோர்ன் வடக்கில் நோர்வேயின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக அறிந்துகொள்ளும் நோக்குடன் முதற்தடவையாக வடக்குக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

அதன் ஒரு கட்டமாகவே வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

Related Posts