நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை தற்காலிகமாக குறைவடையும்!!!

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை தற்காலிகமாக அடுத்த சில தினங்களில் குறைவடையும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடமாகாணத்தின் ஊடாகவும் மற்றும் தென்மாகாணத்தின் கடற்கரையோரங்களிலும் வலுவான காற்று வீசக்கூடும் .

வடக்கு , வடமேற்கு , மேற்கு , மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் ஓரளவு மழைபெய்யும்.

மேற்கு , சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகள் காலை வேளைகளில் பனிமூட்டத்துடன் கூடிய காலநிலை காணப்படும்.

காங்கேசன்துறையிலிருந்து முல்லலைத்தீவு ஊடாக புத்தளம் வரையிலான கடற்கரைப்பகுதியில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related Posts