Ad Widget

நாடு திரும்பல் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மேலும் 41 பேர் தாயகம் திரும்பினர்

ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஸ்தானிகராலயத்தின் நாடு திரும்பல் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ், மேலும் 41 இலங்கை அகதிகள் இந்தியாவில் இருந்து நாடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தின் சென்னை, மதுரை ஆகிய பகுதிகளில் இருந்து இலங்கையை வந்தடைந்த இவர்களில் 15 ஆண்கள் மற்றும் 26 பெண்களும் அடங்குவதாக தெரியவந்துள்ளது.

இவர்கள் திருகோணமலை, யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் மீள்குடியேற்றப்படவுள்ளதாக, இந்திய ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது.

இதேவேளை, 100,000 இலங்கை அகதிகள் தமிழகத்தில் இருந்ததாகவும், அவர்களில் 5,600 பேர் கடந்த 2011ம் ஆண்டில் இருந்து நாடு திரும்பியுள்ள நிலையில், 64,000 பேர் அங்குள்ள முகாம்களில் வசித்து வருவதாகவும் இந்தியத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

அத்துடன் கடந்த வருடத்தில் மாத்திரம் இவ்வாறு 429 பேர் இலங்கையை வந்தடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts