Ad Widget

சேகுவாரே நினைவு தினம் : யாழ் பொது நூலகத்திற்கு நூல்கள் அனபளிப்பு

சேகுவாராவின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை ஒரு தொகுதி நூல்கள் யாழ் பொது நூலகத்திற்கு வழங்கி வைக்கப்பட்டது.

book-donation-sey-libuary

மக்கள் விடுதலை முன்னணியின் சோசலிச இளைஞர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான பிமல் ரத்நாயக்க பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நூல்களை யாழ். பொதுநூலக பிரதான நூலகரான சுகந்தி சதாசிவமூர்த்தியிடம் வழங்கி வைத்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகரன் மற்றும் நாடக கலைஞர்கள், இளைஞர் அணியினர் எனப்பலர் கலந்து கொண்டனர்.

Related Posts