சுற்றாடலை பாதுகாக்க எமது அரசில் சட்டதிட்டங்கள் – ஜனாதிபதி

எமது அரசு காடுகளும் வன சீவராசிகளும் பாதுகாப்பாக இருப்பதற்காக அவை அழிக்கப்படுவதை தடுக்கின்ற அதேவேளையில், கூருணர்வு மிக்க சூழல் முறைமையை பாதுகாப்பதற்காகவும் புதிய சட்டங்களை இயற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கும். அவற்றை அழிக்கின்ற சக்திகளை அந்தஸ்த்து பாராமல் சட்டத்தின் முன் கொணர்வதற்கு நடவடிக்கை எடுக்கும் என உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வௌியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது-

மனிதனுக்கும் சூழலுக்கும் இடையில் நிலவுகின்றன நல்லிணக்கமும் சகவாழ்வும் புவி பரப்பில் உயிர்களின் வாழ்வில் தொடங்கி வரலாறு ஆரம்பமான காலம் வரை செல்கின்ற செழிப்பான ஒரு பிணைப்பாகும்.1972ஆம் ஆண்டு நடைபெற்ற சூழல் மகாநாட்டின்போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் சூழலை பாதுகாப்பதற்கான உலகவாழ் மக்களின் கவனத்தை திருப்பும் முகமாக ஒவவொரு ஆண்டும் ஜூன் மாதம் 5ஆம் திகதி உலக சுற்றாடல் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இம்முறை சுற்றாடல் தினத்தின் தொனிப்பொருள் ‘நிலையான பயன்பாடு- புவி பரப்பை பாதுகாக்கிறது’ என்பதாகும்.இயற்கையின் பிள்ளைகள் என்ற வகையில் சூழலுக்கு எதிரான மனித செயற்பாடுகளை தடுத்து இயற்கை மரபுரிமைகள் தடையின்றி நிலைிபேறாக இருப்பதற்கு எம்மை அர்ப்பணித்துக் கொள்வது நம் அனைவரினதும் கடமையும் பொறுப்புமாகும்.

அதன்போது விலங்குகள்- தாவரங்கள்- கட்டளைச்சட்டதை துணிச்சலுடனும் பக்கச்சார்பற்ற வகையிலும் தீவிரமாக செயற்படுத்துவதும் அபிவிருத்தி கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் எண்ணக்கரு ரீதியாக இருக்கின்ற நிலையிலேயே சூழலியல் தாக்கம் தொடர்பான அடிப்படை மதிப்பீட்டு அறிக்கையினூடாக சூழல் நேயம் கொண்ட கருத்திட்டமாக ஆரம்பிப்பதும் சூழல் தொடர்பாக எடுக்கக்கூடிய ஆக்கபூர்வமான நடவடிக்கையாகும்.

மேலும்- சூழலை அழிக்கும் அனைத்து செயல்களுக்கு எதிராக சட்டத்தை வலுவுள்ளதாக்கி சூழலை மரம், செடி, கொடிகளையும் விலங்குகளையும் நேசிக்கின்ற சந்ததி ஒன்றை உருவாக்குவது இவை அனைத்தின் மூலமும் எதிர்பார்க்கின்றது.

இம்முறை உலக சுற்றாடல் தினத்தில் சூழலைப் பாதுகாக்கின்ற அத்தகைய நாளைப் பொழுனெ்றை உருவாக்குவனேவரினதும் இலட்சியமாகும்.

Related Posts