Ad Widget

சாவகச்சேரியில் புலி படம் பார்த்தோர் மீது மாடு மோதியது

சாவகச்சேரியிலுள்ள திரையரங்கில் புலி திரைப்படத்தை பார்த்துவிட்டு, மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இருவர், வீதியின் குறுக்காகச் சென்ற மாட்டுடன் மோதி காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

முழங்காவில் பகுதியைச் சேர்ந்த சிவானந்தராஜா சுமன் (வயது 28), சரசாலை தெற்கு பகுதியைச் சேர்ந்த குணசேகரன் தனுசன் (வயது 17) ஆகிய இருவருமே காயமடைந்துள்ளனர்.

இவ்விருவரில், சுமன் என்பவருக்கு இன்னும் சில நாட்களில் திருமணம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts