யாழ்ப்பாணத்திலிருந்து மாத்தளை நோக்கி பயணித்த புகையிரதத்தில் முச்சக்கரவண்டி மோதியதில் சாரதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சாவகச்சேரி – மீசாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
முச்சக்கர வண்டி சாரதி புகையிரத கடவையின் சமிஞ்ஞையை கவனிக்காது புகையிரதக் கடவையை கடக்க முற்பட்டபோது எதிரே வந்த புகையிரதம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த நிலையில் படுகாயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதி சாவகச்சேரி வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.