பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் தங்களுக்குள் இருந்த பகைமைகள் நீங்கி பேசிக்கொண்டனர்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேசிய பொங்கல் விழாவில் பங்கேற்பதற்காகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தார்.
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் பங்கேற்றார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பரிவட்டம் கட்டி முதலமைச்சர் வரவேற்றார்.
பின்னர் இருவரும் இருந்து நீண்ட நேரம் உரையாடினர்.
100 நாள் அரசின் காலத்தில் இருவரும் முன்னர் பகைமை பாராட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.