கொழும்பிலிருந்து யாழ்வந்த அரைச் சொகுசு பேரூந்து விபத்து: இருவர் காயம்

கிளிநொச்சியில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று அதிகாலை ஆனையிறவு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரைச் சொகுசு பேரூந்தே விபத்தில் சிக்கியுள்ளது. இதன்போது பேரூந்தில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளனர்.

வேக கட்டுப்பாட்டை இழந்து குறித்த பேரூந்து வீதியில் அமைந்திருந்த பாலத்துடன் மோதியதாகத் தெரிவிக்கப்படுகுpறது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts