கைவிடப்பட்ட இராணுவ முகாமில் திடீரென வெடித்த குண்டுகள்!

மட்டக்களப்பு- மாவடிவேம்பில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த இராணுவ முகாமில் நேற்றுமாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த சுமார் 15 குண்டுகள் வெடித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மட்டக்களப்பு மாவடிவேம்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இராணுவத்தினரால் கைவிடப்பட்ட இராணுவ முகாமில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் பாரிய தீவிபத்து ஏற்பட்டது.

தீ விபத்து காரணமாக இராணுவத்தினரால் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகள் வெடித்ததாகவும், முகாமை சுற்றி பெரும் புகைமூட்டம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், குறித்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டிருந்ததாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

batii-camp-fire-bomp-2

batii-camp-fire-bomp

Related Posts