Ad Widget

கூட்டமைப்பைப் பிளவுபடுத்த சிங்கள ஊடகங்கள் சில முயற்சி! – மாவை குற்றச்சாட்டு

வடமாகாண சபை மூலம், மக்களின் தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்வது, அபிவிருத்தி நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது, மற்றும் வடமாகாண சபையின் சமூகமான செயற்பாடுகள் தொடர்பாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர்கள், வடமாகாண மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் விரைவில் பேச்சு நடத்தப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைக் கொண்டு வருவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கை எடுத்து வருவதாக சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில் எந்தவிதமான உண்மையும் கிடையாது. அவ்வாறு எவரும் பேசவில்லை, சிங்கள ஊடகங்கள் தமிழ் மக்களிடையே திட்டமிட்டு பிளவுகளை ஏற்படுத்துவதற்காக இவ்வாறு செயற்படுகின்றன. அவை தொடர்பில் தமிழ் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

Related Posts