Ad Widget

குடும்ப பெண்ணைக் கடத்திய குற்றச்சாட்டில் அவரது கணவன் உட்பட 9 பேர் கைது

வல்வெட்டித்துறைப் பகுதியில் குடும்ப பெண்ணைக் கடத்திய குற்றச்சாட்டில் அவரது கணவன் உட்பட 9 பேரை வல்வெட்டித்துறை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

நேற்று முன்தினம் தாயாருடன் பருத்தித்துறை நீதிமன்றத்தில் இடம்பெற்ற தாபரிப்பு, தொடர்பான விசாரணைக்கு தாயாருடன் வந்து கொண்டிருந்த வல்வெட்டித்துறையைச் சேர்ந்த குடும்ப பெண் ஒருவரை, வல்வெட்டித்துறைப் பகுதியில் வைத்து வெள்ளை வானில் வந்த கும்பல் ஒன்று கடத்தியது.

இது தொடர்பாக குறித்த பெண்ணின் தாயாரால் வல்வெட்டித்துறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனை அடுத்து துரிதமாக தேடுதலை மேற்கொண்ட பொலிஸார், சந்தேகத்தின்அடிப்படையில் பெண்ணின் கணவன் உட்பட 9 பேரை வெவ்வேறு இடங்களில் வைத்து கைது செய்ததோடு பெண்ணையும் மீட்டுள்ளனர்

கைது செய்யப்பட்ட 9பேரும், பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகள் மேற்கொண்டு வருவதுடன் இன்று நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts