கீரிமலை தீர்த்தக்கடலில் கற்பாறைகள் அகற்றல்

கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்தின் தீர்த்தக் கடலில் உள்ள கற்பாறைகள் பக்தர்கள் நீராடுவதற்காக சுமார் 5.6 மில்லியன் ரூபா செலவில் அகற்றப்படவுள்ளதாக யாழ். மாவட்ட செயலர் என்.வேதநாயகன் கூறியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவிலுள்ள கீரிமலை தீர்த்தக்கடலானது இந்து மக்கள் ஆடி அமாவாசை
தினத்தில் பிதிர்க்கடன் செலுத்துவதில் முக்கியம் வாய்ந்த இடமாகும்.

இவ்வாறு விசேட தினங்களில் தீர்த்தக்கடலில் நீராடுபவர்கள் அங்கு காணப்படும் கடற்பாறைகளினால் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்கின்றனர். இதன் முக்கியத்துவத்திற்காக இந்து அமைப்புக்களால் மேற்படி விடயம் எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இதனை சீர்செய்வதற்கென மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சிடமிருந்து 5.6 மில்லியன் ரூபாய் இவ்வருடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வேலைத்திட்டமானது கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமை திணைக்களத்தின் அனுமதி கிடைத்தவுடன் ஆரம்பிக்கப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts