Ad Widget

காணாமல் போனோரின் உறவுகளுக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல்

காணாமல் போனோரின் குடும்ப உறுப்பினர்களுக்கு இன்னும் அச்சுறுத்தல்கள் மற்றும் துன்புறுத்தல்கள் இடம்பெற்று வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இலங்கையில் பத்துநாள் விஜயம் மேற்கொண்ட காணாமல் போனோர் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாட்டுக் குழு, நேற்று மாலை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை மேற்கொண்டனர். இதன்போதே அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.

தமது விஜயத்தின் போது மேற்கொண்ட கலந்துரையாடல்களில் காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு பாதுகாப்பு பிரிவினரால் அச்சுறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தௌிவான சாட்சியங்கள் கிடைத்துள்ளது என, அவர்கள் தெரிவித்துள்ளது.

இது ஜனநாயக சமூகத்தால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாத நிலை எனவும் அவர்கள் இதன்போது மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related Posts