Ad Widget

காங்கேசன்துறையில் தொடரும் இரும்புத் திருட்டு!

காங்கேசன்துறை பகுதியில் துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான சீமெந்து தூண்களை உடைத்து அவற்றின் கம்பிகளை திருடர்கள் திருடிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையினர் மற்றும் , காங்கேசன்துறை பொலிஸாருக்கு அறிவித்தும் நடவடிக்கை எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரதேசமானது கடந்த காலங்களில் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்துள்ள நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அப்பகுதியை விட்டு இராணுவத்தினர் வெளியேறியிருந்தனர். இதனையடுத்து குறித்த பகுதிகளில் திருட்டுச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts