Ad Widget

கடலில் குளிக்கச் சென்ற இளைஞர்கள் பலி

பருத்தித்துறை, நாகர்கோவில் கடலில் குளிக்கச் சென்ற இரு இளைஞர்கள், திங்கட்கிழமை (26) சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

கொடிகாமம், மிருசுவில் பகுதியைச் சேர்ந்த அருள்ராஜா ஜோன் அஜித் (வயது 21), சண்முகசிங்கம் டினா (வயது 21) ஆகிய இருவருமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

மீன் வாங்கச்செல்வதாக கூறி நண்பரிடம் மோட்டார் சைக்கிளைப் பெற்றுக்கொண்டு கடலில் குளிக்கச் சென்ற போதே இவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

அருள்ராஜா ஜோன் அஜித் என்பவருடைய சடலம் குடாரப்பு கடற்கரையிலும் சண்முகசிங்கம் டினா என்பவருடைய சடலம் நாகர்கோவில் கிழக்கு கடற்கரையிலும் மீட்கப்பட்டுள்ளன.

Related Posts