Ad Widget

எல்லை தாண்டியதாக கூறப்படும் 14 தமிழக மீனவர்கள் கைது

பாக்கு நீரினை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

இராமேசுவரத்தில் இருந்து 600 படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். பாக் நீரினை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களை விரட்டியடித்துள்ளனர்.

மேலும் 14 மீனவர்களை கைதுசெய்த கடற்படையினர் மூன்று படகுகளையும் இதன்போது கைப்பற்றியுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.

Related Posts