Ad Widget

இலங்கையில் H.I.V நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த வருடத்தில் H.I.V நோயாளர்கள் 225 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

2014 ஆம் ஆண்டைவிட 2015 ஆம் ஆண்டு இந் நோயாளர்கள், அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் எயிட்ஸ் நோய் தடுப்பு பிரிவின் இயக்குனர், மருத்துவர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.

இதில் 27 கர்ப்பினி பெண்கள் உள்ளடங்குகின்றனர்.

15 வயது முதல் 23 வயதான இளைஞர்களிடம் எயிட்ஸ் நோய் பரவி வருது அபாயகரமானது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட 27 இளைஞர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பற்ற உடல் உறவில் இருந்து விலகினால், இந்நோயை கட்டுப்படுத்த முடியும் என, சுகாதார அமைச்சு சுட்டிகாட்டியுள்ளது.

Related Posts