இலங்கைக்கு பூகம்ப ஆபத்து?

earthquick- pumi-athirchcheஇலங்கைகுரிய பூமி மண்டலப் பகுதியில் சுமார் 600 கிலோ மீற்றர் தூரத்தில் இலங்கையின் தெற்கு கடலில் பூமிக்கு அடியில் பாரிய வெடிப்பு ஏற்பட்டு வருவதாக சிரேஷ்ட பூகோளவியல் பேராசிரியர் சீ.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

பாகிஸ்தானின் அண்மையில் ஏற்பட்ட பூமியதிர்ச்சிக்குப் பின்னரே இந்த ஆபத்தான நிலைமை உருவாகியுள்ளது. இதனால் இலங்கை பூகம்பத்துக்கு பலியாகும் ஆபத்தை எதிர்நோக்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் 2 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் இந்த புதிய புவி அடுக்கு உருவாகி வருவதுடன் தற்போது பூமிக்குள் வெடிப்பு ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts